பேங்காக்: விலைவாசி, குடும்பச் செலவுகளுக்காக வாங்கும் கடன்கள் அதிகரித்து வருவதால் குறைந்தபட்ச நாள் சம்பளத்தை தாய்லாந்து உயர்த்த இருக்கிறது.
உயரும் விலைவாசியைச் சமாளிக்க ஊழியர்களுக்கு உதவும் வகையில் வரும் அக்டோபர் மாதத்திலிருந்து நாள் சம்பளம் சராசரியாக 5.02 விழுக்காடு உயர்த்தப்படும் என்று தாய்லாந்தின் மனிதவள அமைச்சு கூறியது.
இதன்மூலம் சராசரி குறைந்தபட்ச நாள் சம்பளம் 337 பாட்டாக ($12.92) ஏற்றம் காணும்.
நாள் சம்பளம் ஆகக் கடைசியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயர்த்தப்பட்டது.
தாய்லாந்தின் பணவீக்கம் ஐந்திலிருந்து ஆறு விழுக்காடு வரை அதிகரிக்கக்கூடும் என்றும் ஆகையால் பரிந்துரைக்கப்பட்டுள்ள நாள் சம்பள அதிகரிப்பு நியாயமானது என்றும் பொருளியல் நிபுணர் நொனாரிட் பிசோன்யாபுட் தெரிவித்தார்.
"அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து உயிர் பிழைக்க மட்டுமே இந்த நாள் சம்பள அதிகரிப்பு குறைந்த வருமான ஊழியர்
களுக்குப் போதுமானதாக இருக்கும்," என்று தாய்லாந்து மேம்பாட்டு ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளரான டாக்டர் நொனாரிட் தெரிவித்தார்.

