தைப்பே: சீனா எவ்வளவுதான் சினமூட்டினாலும் தைவான் அமைதி காக்கும் என்று தைவான் அதிபர் சாய் இங் வென் தெரிவித்தார்.
ஆனால் அடங்கிப் போவதால் தைவான் பதிலடி கொடுக்காது என்று சீனா கருதிவிடக்கூடாது என்று அவர் நேற்று எச்சரிக்கை விடுத்தார்.
தைவான் நீரிணையில் தைவானின் கட்டுப்பாட்டில் உள்ள தீவுகளில் உள்ள ராணுவ வீரர்களை அவர் நேற்று நேரடியாகச் சென்று பார்த்தார்.
அண்மையில் அமெரிக்க
அரசியல்வாதிகள் தைவானுக்குப் பயணம் மேற்கொண்டதால் அதிருப்தி அடைந்த சீனா, போர்ப் பயிற்சிகளைத் தீவிரப்படுத்தியது.
இந்நிலையில், அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தின் ஆளுநர் டக் டுசி தைவானுக்குப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தைவான் கூறியது.

