சிங்கப்பூரில் கோலாகலமான விநாயகர் சதுர்த்தி

2 mins read
87f456c4-a024-4031-9e4d-0bd805593006
ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் ஆலயத்தில் திரண்ட பக்தர்கள் (இடது).தேக்காவில் விற்கப்பட்ட விநாயகர் சிலைகள். படங்கள்: திமத்தி டேவிட் -
multi-img1 of 2

சிங்­கப்­பூர் முழு­வ­தும் உள்ள பல கோயில்­களில் விநா­ய­கர் சதுர்த்­தியை முன்­னிட்டு நேற்று சிறப்பு வழி­பா­டு­கள் இடம்­பெற்­றன.

ஸ்ரீ லயன் சித்தி விநா­ய­கர் ஆல­யத்­தில் நேற்று காலை­யி­லேயே பெரு­கி­யது பக்­தர்­கள் கூட்­டம். ஈராண்­டு­க­ளுக்­குப் பிறகு கூட்­டம் நிறைந்த இவ்­வா­ல­யத்­தில் விநா­ய­க­ரைக் குடும்­பத்­தோ­டும் நண்­பர்­க­ளோ­டும் பக்­தர்­க­ளால் நேர­டி­யாக மன­நி­றை­வோடு வழி­பட முடிந்­தது.

பல­ரும் விரும்­பிச் செல்­லும் ஆல­ய­மா­கத் திக­ழும் இதில் பக்­தர்­கள் தங்­கள் பிரார்த்­த­னை­க­ளைப் பூர்த்தி செய்­வ­தற்கு 108 முறை விநா­ய­கர் சன்­ன­தியை வலம் வரும் வழக்­க­மும் உண்டு.

இவ்­வாண்டு ஸ்ரீ சிவன் கோயி­லில் சிறப்பு வழி­பா­டு­கள் மட்­டு­மல்­லா­மல் 6,000 தேங்­காய்­கள் கொண்டு உரு­வாக்­கப்­பட்ட பெரும் விநா­ய­கர் சிலை­யும் விநா­ய­கர் சதுர்த்­திக்கு சிறப்பு அம்­சமாக அமைந்­தது.

இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தில் சுமார் 30 ஆண்­டு­க­ளாக தொண்­டூ­ழி­ய­ராக இருக்­கும் ராஜ­காந்­தம் கணே­சன், "ஒவ்­வோர் ஆண்­டும் ஐந்து மணிக்கே ஆல­யத்­திற்கு வந்து பூஜைக்கு தேவைப்­படும் உத­வியை செய்து வரு­கி­றேன். கொண்­டாட்­டங்­கள் ஆரம்­பிப்­ப­தற்கு முன்­ன­தாக நானும் மற்ற சில­ரும் கொழுக்­கட்டை தயார் செய்­வோம், பக்­தர்­க­ளுக்கு பால்­கு­டங்­களை விற்­க­வும் சில ஏற்­பா­டு­க­ளைச் செய்ய உத­வு­வோம்," என்­றார்.

விநா­ய­கர் சதுர்த்­தி­யன்று எல்­லா­ரை­யும் போலத் தானும் காலை­யில் எழுந்து, வீட்டு சாமி அறை­யி­லி­ருக்­கும் விநா­ய­க­ருக்கு உண­வும் பல­கா­ரங்­களும் படைப்­ப­தா­கக் கூறி­னார், இல்­லத்­த­ர­சி­யான ஷீலா கோபா­ல­கி­ருஷ்­ணன்.

"கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் சென்ற ஈரரை ஆண்­டு­க­ளாக விநா­ய­க­ரின் பிறந்­த­நா­ளா­கக் கொண்­டா­டப்­படும் இந்­நாள் பாது­காப்பு நடை­மு­றை­க­ளால் பர­ப­ரப்­பின்றி இருந்­தா­லும், இவ்­வாண்டு மக்­கள் கூட்­டத்­தைப் பார்க்­கும்­போது மகிழ்ச்­சி­யாக உள்­ளது," என்று அவர் முகம் மல­ரச் சொன்­னார்.

லோயாங் துவா பெக் கோங் ஆல­யத்­தில் 16 விநா­ய­கர் சிலை­க­ளுக்கு இன்று சிறப்பு சந்­தன அலங்­கா­ர­மும் செய்­யப்­பட்­டது.

சீனர்­களும் இந்­தி­யர்­களும் இங்கு விநா­ய­கரை வழி­ப­டு­வது பல்­லாண்­டு­கால வழக்­க­மா­க­விட்­டது.

பௌத்த, தௌயிஸ்ட், இந்து சம­யங்­க­ளைச் சேர்ந்த தெய்­வங்­க­ளின் சிலை­களும் இஸ்­லா­மிய 'கிரா­மாத்'தும் உள்ள இவ்­வா­ல­யம், 1980களில் முதன்­மு­த­லில் ஒரு குடி­சை­யாக இருந்­தது.

தீ விபத்­தில் இக்­கு­டிசை அழிந்துபோனதால் புதிய ஆல­யம் ஒன்று பொது­மக்­க­ளின் நன்­கொடைத் தொகை­யைக் கொண்டு கட்­டப்­பட்­டது.

ஆல­யம் இருந்த நிலத்­தில் குத்­த­கைக் காலம் நிறை­வ­டைந்த கார­ணத்­தால் அது 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லோயாங் வேக்கு இடம் மாறி­யது.

ஒவ்­வோர் ஆண்­டும் சீனப் புத்­தாண்­டும் விநா­ய­கர் சதுர்த்­தி­யும் துவா பெக் கோங் ஆல­யத்­தில் சிறப்­பா­கக் கொண்­டா­டப்­பட்டு வரு­கின்­றன.

மாதங்கி இளங்கோவன்