எரிபொருள் விலை 30% உயர்வு

எரிபொருள் விலை 30% உயர்வு

2 mins read
b3057b9a-bd40-4b3a-bb3c-f11e4f56ff76
-

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வில் மானிய விலை­யில் வழங்­கப்­பட்ட எரி­பொ­ருள்­க­ளின் உள்­நாட்டு விலையை 30 விழுக்­காடு உயர்த்து வதாக அந்­நாட்­டின் உயர் அதி­கா­ரி­கள் கூறி­யுள்­ள­னர்.

இதன்­படி, மானிய விலை­யில் வழங்­கப்­படும் பெட்­ரோ­லின் விலை லிட்­ட­ருக்கு 7,650 ருப்­பி­யா­வில் இருந்து 10,000 ருப்­பி­யா­வாக ($0.94 வெள்ளி) உய­ரும். அதே சம­யம் மானிய விலை­யில் வழங்­கப்­படும் டீசல் விலை லிட்­ட­ருக்கு 5,150 ருப்­பி­யா­வில் இருந்து 6,800 ருப்­பி­யா­வாக உய­ரும் என எரி­சக்தி அமைச்­சர் அரி­ஃபியா தெரி­வித்­தார்.

எரி­பொ­ருள் விலை உயர்வு கடி­ன­மான முடிவு என்ற அதி­பர் ஜோக்கோ விடோடோ, பொருளி­யலைச் சமா­ளிக்க வேறு­வ­ழி­யில்லை என்று சொன்னார்.

அனைத்­து­லக அள­வில் எண்­ணெய் விலை உயர்வு, குறைந்து வரும் ருப்­பியா நாண­யத்­தின் மதிப்பு ஆகி­யவை இதற்­கான கார­ண­மாக பார்க்­கப்­ப­டு­கிறது.

எரி­பொ­ருள் விலை உயர்த்­தப்­பட்­டா­லும், அனைத்­து­ல­க கச்சா எண்­ணெய்­யின் விலை­யைப் பொறுத்து, இன்­னும் அதிக நிதி தேவைப்­படும் என்று நிதி அமைச்­சர் ஸ்ரீ முல்­யானி இந்­தி­ரா­வதி கூறி­னார்.

விலை­வாசி உயர்­வின் தாக்­கத்­தைத் தணிக்க ஏழை­க­ளுக்கு அர­சாங்­கம் நிதி உத­வி­களை வழங்­கும் என்­றும் அவர் சொன்­னார்.

பெரு­ம­ளவு மானிய விலை­யில் எரி­பொ­ருள் வழங்­கப்­பட்டு வந்த நிலை­யில், மற்ற வட்­டார நாடு­க­ளை­விட இந்­தோ­னீ­சி­யா­வின் பண­வீக்­கம் குறை­வா­கவே இருந்­தது.

அதன் ஆகஸ்ட் மாத பண­வீக்­கம் 4.69 விழுக்­கா­டாக இருந்­தது.

எரி­பொ­ருள் விலை இந்­தோ­னீ­சி­யா­வில் அர­சி­யல் ரீதி­யி­லான பிரச்­சி­னை­யா­கப் பார்க்­கப்­ப­டு­கிறது. ஏனெ­னில் மானி­ய விலையில் விற்கப்படும் எரி­பொ­ரு­ளில்

80 விழுக்­காட்­டிற்­கும் அதி­க­மா­னவை அர­சுக்குச் சொந்­த­மான எண்­ணெய் நிறு­வ­ன­மான பெர்­டா­மி­னா­வைச் சார்ந்­துள்­ளது. மேலும் இந்த விலை உயர்வு, குடும்­பங்­கள், சிறு வர்த்­த­கங்­களில் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தக்கூடும்.

இந்­தோ­னீ­சி­யா­வில் கடை­சி­யாக 2014ல் எரி­பொ­ருள் விலை உயர்த்­தப்­பட்­ட­போது, மக்­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.