சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பும் 2வது முயற்சியும் கைவிடப்பட்டது

சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பும் 2வது முயற்சியும் கைவிடப்பட்டது

1 mins read
5e6eb93c-9261-4d93-a668-b1d6a9de69ac
-

ஃபுளோரிடா: சந்­தி­ர­னுக்கு ஆளில்லா ராக்­கெட் அனுப்­பும் இரண்­டா­வது முயற்­சி­யை­யும் நாசா தற்­கா­லி­க­மாக கைவிட்­டுள்­ளது. ராக்­கெட்­டில் தொடர்ந்து எரி­வாயு கசிவு ஏற்­ப­டு­வதே அதற்கு கார­ணம் என்று கூறப்­பட்­டுள்­ளது.

ஃபுளோரி­டா­வின் கேப் கார்­னி­வல் ஏவு­த­ளத்­தில் இருந்து உள்­ளூர் நேரப்­படி சனிக்­கி­ழ­மை­யன்று பாய்ச்­சப்­ப­டு­வ­தற்­குத் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது.

ராக்­கெட் ஏவப்­ப­டு­வ­தற்கு மூன்று மணி நேரம் முன்­ன­தாக, முயற்­சியைக் கைவி­டு­வ­தாக அத்­திட்ட அதி­கா­ரி­கள் கூறி­னர்.

முன்­ன­தாக சென்ற 29ஆம் தேதி­யன்று மேற்­கொள்­ளப்­பட்ட முதல் முயற்­சி­யும் எரி­வாயு கசிவு கார­ண­மாக கைவி­டப்­பட்­டது.

இந்­தப் பின்­ன­டை­வால், சந்­தி­ர­னுக்கு மனி­தர்­களை அனுப்­பும் நாசா­வின் ஆர்­டெ­மிஸ் திட்­டம் தாம­த­ம­டை­யும்.

ஆளில்லா ராக்­கெட்டை மீண்­டும் ஏவு­வ­தற்­கான முயற்சி, இம்­மா­தம் 19 முதல் 30ஆம் தேதிக்கு இடைப்­பட்ட காலத்­திலோ அல்­லது அக்­டோ­பர் மாதமோ மேற்­கொள்ளப்­படும் என்று நாசா உதவி நிர்­வாகி ஜிம் ஃபிரி சொன்­னார்.