தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடலில் கவிழ்ந்த படகு; ஐவர் மரணம்

1 mins read
8a01ce6e-1394-404f-8058-a2841b56a65c
-

வெலிங்­டன்: நியூ­சி­லாந்­தின் தென்­தீ­வுக்கு அரு­கில் உள்ள கடற்­ப­குதி யில் படகு கவிழ்ந்­த­தில்

அதில் பய­ணம் செய்து

கொண்­டி­ருந்­த­வர்­களில் ஐந்து பேர் கட­லில் மூழ்கி மாண்­ட­னர்.

இந்­தச் சம்­ப­வம் சிங்­கப்­பூர் நேரப்­படி நேற்று அதி­காலை 6 மணி அள­வில் நிகழ்ந்­தது.

சம்­ப­வம் நிகழ்ந்­த­போது பட­கில் 11 பேர் இருந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

கட­லில் விழுந்­த­வர்­க­ளைத் தேடி, மீட்­கும் பணி ஏறத்­தாழ ஏழு மணி நேரத்­துக்கு நீடித்­த­தாக அறி­யப்­

ப­டு­கிறது.

மாண்­டோ­ரின் சட­லங்­கள் பட­கிற்­குள் இருந்­த­தா­க­வும் அவற்றை நியூ­சி­லாந்­துக் காவல்­து­றை­யின் முக்­கு­ளிப்­புப் பிரிவு அதி­கா­ரி­கள் மீட்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

கட­லில் தத்­த­ளித்­துக்­கொண்­டி­ருந்த ஆறு பேரை மீட்­புப் பணி­

யா­ளர்­கள் காப்­பாற்­றி­னர்.

அவர்­க­ளுக்கு இலே­சான காயங்­கள் ஏற்­பட்­டி­ருந்­த­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர். அத்­து­டன் கடல் அமைதி ­யாக இருந்­த­தாக நியூ­சி­லாந்து அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

திமிங்­கி­லம் மீது படகு மோதி­ருக்­கக்­கூ­டும் என்­றும் அதற்­கான அறி­கு­றி­கள் தென்­பட்­டி­ருப்­ப­தா­க­வும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

ஆனால் சம்­ப­வம் நிகழ்ந்த கடற்­ப­கு­தி­யில் இம்­மா­தம் திமிங்­கி­லங்­கள் பொது­வாக இருக்­காது என்­ப­தால் இது ஆச்­ச­ரி­ய­ம­ளிப்­ப­தாக கைகோரா நக­ரின் மேயர் மிரேக் மெக்­கல் தெரி­வித்­தார்.

மாண்­டோ­ரின் குடும்­பங்­க­ளுக்கு அவர் தமது ஆழ்ந்த அனு­தா­பங்­

க­ளைத் தெரி­வித்­துக்­கொண்­டார்.