ஜகார்த்தா: பாப்புவா நியூ கினியில் நேற்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது மூவர் மாண்டுவிட்டனர். மேலும் சிலர் காயமடைந்தனர்.
அதன் மேற்குப் பகுதியில்
7.6 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தின்போது கட்டடங்கள் சேதமடைந்தன. நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதனைத் தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை, பின்னர் மீட்டுக் கொள்ளப்பட்டது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்தோனீசியாவில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மெண்டாவி தீவில் இருந்து கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
மேற்கு சும்தராவின் மெண்டாவி தீவில் 27 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர். அதைத் தொடர்ந்து 5.3 ரிக்டர் அளவில் 2வது நிலநடுக்கமும் ஏற்பட்டது.
நிலநடுக்கம் வலுவானதாக இருந்தது என்றும் மரத்தினால் செய்யப்பட்ட தங்களது வீடுகள் ஆட்டம் கண்டதாகவும் அப்பகுதிவாசிகள் கூறினர்.
அப்போது, ஒருவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டது. பீதியடைந்த மக்கள் தெருக்களிலும் முகாம்களிலும் தஞ்சமடைந்தனர்.
அப்பகுதியில் இருந்த சில பள்ளிக்கூடங்களும் சுகாதார மையங்களும் லேசாக சேதமடைந்ததாக பேரிடர் மேலாண்மை குழு சொன்னது.

