கியவ்: கடந்த வாரயிறுதியில் ரஷ்யப் படைகளுக்கு எதிராக உக்ரேனியப் படைகள் நடத்திய தாக்குதல்களுக்குப் பழிதீர்க்கும் விதமாக, மின் விநியோகக் கட்டமைப்பின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதற்கு உக்ரேன் குற்றஞ்சாட்டியுள்ளது.
ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு நீர் வசதிகளும் கார்கிவ் நகரில் உள்ள மின்சார நிலையங்களும் இலக்காகின. இதனால் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
ஆனால், குடிமக்களைக் குறிவைத்து தன் படைகள் வேண்டுமென்றே தாக்குதல்களை நடத்தவில்லை என்று ரஷ்யா கூறியது.
இதற்கிடையே, இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து உக்ரேனிய ஆயுதப் படைகள் 3,000க்கும் அதிகமான சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பைக் கைப்பற்றி இருப்பதாக உக்ரேனின் தலைமைத் தளபதி ஜெனரல் வேலரி ஸலுஸ்யி கூறினார்.

