'எலிசபெத் அரசியார் எனக்கு திசைகாட்டியாக இருந்தார்'

'எலிசபெத் அரசியார் எனக்கு திசைகாட்டியாக இருந்தார்'

1 mins read
6ba1a0de-4b78-40ca-a44d-60a92f2928c7
2019 மே 18ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், எலிசபெத் அரசியாருடன் பேசும் இளவரசர் ஹேரி. கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ் -

லண்­டன்: மறைந்த எலி­ச­பெத் அரசி­யா­ருக்கு நேற்று அஞ்­சலி செலுத்­திய அவ­ரு­டைய பேரன் இள­வ­ர­சர் ஹேரி, தம் பாட்டி தமக்கு திசைகாட்­டி­யாக இருந்­த­தா­கச் சொன்­னார். அர­சி­யா­ருக்கு தாம் எப்­போ­தும் நன்­றி­யு­டன் இருப்­ப­தா­கக் கூறிய இள­வ­ர­சர் ஹேரி, 37, அரசியார் தம் வாழ்­நாள் முழு­வ­தும் கண்­ணி­யத்­து­ட­னும் கரு­ணை­யு­ட­னும் இருந்­ததை நினை­வு­கூர்ந்­தார்.

அரச குடும்­பத்­தை­விட்டு வெளி­யேறி 2020ல் தம் மனைவி மேக­னு­டன் அமெ­ரிக்­கா­வுக்கு இடம்­பெயர்ந்த இள­வ­ர­சர் ஹேரி, "உல­கம் முழு­வ­தும் அவர் (அர­சி­யார்) போற்­றப்­பட்டு ஏரா­ள­மா­னோ­ரின் மதிப்­பை­யும் பெற்­றார்," என்­றார்.