ஜகார்த்தா: இந்தோனீசிய ஊழியர்களுக்கான குறைந்தபட்ச வருமானம் குறித்தும் தொழில் தொடர்பான மற்ற விதிமுறைகள் குறித்தும் மறுஆய்வு செய்யப்படும் என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்
துள்ளது.
எரிபொருள் விலையை
இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ 30 விழுக்காடு அதி
கரித்ததை அடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்மையில் இந்தோனீசியாவில் தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்
களுக்கு ஏற்பாடு செய்திருந்தன.
ஊழியர்களின் சம்பளம் நீண்டகாலமாக அதிகரிக்கப்படாமல் இருக்கும் நிலையில் விலை அதி
கரிப்பை ஏற்க முடியாது என்று போர்க்கொடி உயர்த்தப்பட்டது.
எரிபொருள் விலை அதிகரிப்பு பணவீக்கத்தை மோசமாக்கும் என்று கூறப்படுகிறது.
அதிகரிக்கும் உணவு விலையால் இந்தோனீசியாவில் 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு பணவீக்கம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
மத்திய ஜகார்த்தாவில் உள்ள அதிபர் மாளிகைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை அதிபர் அலுவலகத் தலைவர் திரு ஜெரு புடி ஹார்டோனோ சந்தித்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக
இந்தோனீசிய அதிபர் மாளிகை அறிக்கை வெளியிட்டது.

