புத்ராஜெயா: மலேசியாவில் எதிர்பார்க்கப்பட்டதற்கு முன்பே
வெள்ளம் ஏற்படக்கூடும் என்று அந்நாட்டுப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் எச்சரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் வடகிழக்குப் பருவமழையால் ஆறு மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் ஏற்படுவதற்கு முன் அதை எதிர்கொள்ள தகுந்த நட
வடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று திரு இஸ்மாயில் சப்ரி அழைப்பு விடுத்துள்ளார்.
பேரிடர் நிர்வாகக் குழுக்கள் தயார்நிலையில் வைக்கப்
பட்டுள்ளன.
வெள்ளத்தை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட இருக்கும்
நடவடிக்கைகளுக்காக 8 மில்லியன் ரிங்கிட் ($2.48 மில்லியன்) ஒதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, பல்வேறு மாவட்டங்களில் மீட்புப் பணிகளுக்காக 320 ஃபைபர்கிளாஸ் படகுகளை வழங்க 4.8 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, 6,010 துயர்துடைப்பு மையங்கள் அமைக்கப்படுகின்றன. வரும் நவம்பர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை கிளந்தான், திரங்கானு, பாஹாங் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் மாதத்திலிருந்து ஜனவரி மாதம் வரை ஜோகூர், சாபா, சரவாக் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று
முன்னுரைக்கப்பட்டுள்ளது.

