ஜகார்த்தா: இந்தோனீசியப் அதிபரான ஜோக்கோவி என்றழைக்கப்படும் ஜோக்கோ விடோடோ 2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் துணை அதிபர் பொறுப்பிற்குப் போட்டியிடக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட திரு ஜோக்கோவி நியமிக்கப்பட்டால் அது சாத்தியமாகலாம்.
திரு ஜோக்கோவியின் கட்சியான 'பிடிஐ-பி' எனும் இந்தோனீசிய ஜனநாயகப் போராட்டக் கட்சியின் மூத்த அதிகாரி திரு பம்பாங் வூர்யான்டோ இவ்வாறு கூறியதாக இந்தோனீசியாவின் கொம்பாஸ் எனும் ஊடகம் தெரிவித்தது. இரண்டு தவணைக் காலம் அதிபராக இருக்கும் ஜோக்கோவியால் இனி அப்பதவிக்காகப் போட்டியிட முடியாது.

