அரசியார் நல்லுடல் ஊர்வலத்தில் இளவரசர்கள்

அரசியார் நல்லுடல் ஊர்வலத்தில் இளவரசர்கள்

1 mins read
972281c3-14c1-483f-a1cd-0563cf9d30d6
-

லண்­டன்: பிரிட்­ட­னின் எலி­ச­பெத் அர­சி­யா­ரின் நல்­லு­டல் ஊர்­வ­லத்­தில் அர­ச­ரா­கப் பத­வி­யேற்­றி­ருக்­கும் மூன்­றாம் சார்ல்­சின் இரு புதல்­வர்­களும் பங்­கேற்­ற­னர். நேற்று நடை­பெற்ற ஊர்­வ­லத்­தில் இள­வ­ர­சர்­கள் வில்­லி­ய­மும் ஹேரியும் அர­சி­யா­ரின் நல்­லு­டல் வைக்­கப்­பட்­டி­ருந்த சவப்­பெட்­டிக்­குப் பின்­னா­லேயே இணைந்து நடந்து சென்­ற­னர்.

இரு­வ­ரும் மூன்­றாம் எலி­ச­பெத் அர­சி­யா­ரின் மகனான அர­சர் சார்ல்­சு­டன் இணைந்து பக்­கிங்­ஹம் அரண்­மனை­யி­லி­ருந்து வெஸ்ட்­மின்ஸ்­டர் அரங்­கிற்கு நடந்து சென்­ற­னர். அர­சர் சார்ல்­சின் உடன்பிறப்புகளான இள­வ­ரசி ஆன், இள­வ­ர­சர்­கள் ஆண்­ட்ரூ, எட்­வர்ட் ஆகி­யோ­ரும் ஊர்­வ­லத்­தில் நடந்து சென்­ற­னர்.