அம்மான்: ஜோர்தான் தலைநகர் அம்மானில் நான்கு மாடி குடியிருப்புக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது ஐவர் மாண்டனர். ஆகக் கடைசி நிலவரப்படி 10 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கின்றனர்.
குடிமைத் தற்காப்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
ஜோர்தானியப் பிரதமர் பிஷர் அல்கா-சாவ்னேயும் இதர அமைச்சர்கள் சிலரும் நேற்று முன்தினம் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர்.

