சாரங்கபாணி மீது பெரும் மதிப்பு வைத்த சாமிவேலு

சாரங்கபாணி மீது பெரும் மதிப்பு வைத்த சாமிவேலு

3 mins read
9861a051-c2a8-45be-af04-0ac144aaae83
-

மலே­சிய இந்­தியர் காங்­கி­ர­சின் முன்­னாள் தலை­வ­ரும் மலே­சிய அமைச்­ச­ர­வை­யில் 29 ஆண்­டு­கள் மூத்த அமைச்­ச­ரா­கப் பதவி வகித்­த­வ­ரு­மான திரு ச. சாமி­வேலு நேற்று தமது 86வது வய­தில், வயது மூப்­பின் கார­ண­மா­கக் கால­மா­னார்.

சங்­கி­லி­முத்து, அங்­கம்­மாள் தம்­ப­தி­ய­ருக்கு மூத்த மக­னாக ஜோகூர் மாநி­லத்­தில் குளு­வாங் நக­ருக்கு அரு­கில் இருந்த செங்­க­மலை ரப்­பர் தோட்­டத்­தில் 1936ல் பிறந்த சாமி­வேலு, இளம் வயது முதல் வறுமையில் வாடி­ய­வர்.

தனது ஐந்­தா­வது வய­தில் ஜோகூர் மாநி­லத்தைவிட்டு சிலாங்­கூர் மாநி­லத்­திலிருந்த எல்­மினா தோட்­டத்­திற்­குப் பெற்­றோ­ரு­டன் வந்­தார். பெற்­றோ­ருக்­குப் பால் மரம் சீவும் வேலை­களில் உதவி செய்தார்.

கல்வியைத் தொடர முடி­யாத சூழ்நிலையில். குடும்­பத்­தின் வறுமை காரணமாக வேறு வழி இல்­லா­மல், அந்­த இளம் வய­தி­லேயே குடும்­பத்­திற்கு உத­வி­யாக வேலை செய்யவேண்­டிய கட்­டாய நிலை ஏற்­பட்­டது. பத்து ஆராங்­கில் உள்ள 'மலா­யன் கொலி­ரி­யர்ஸ்' எனும் நிறு­வ­னத்­தில் அலு­வ­ல­கப் பைய­னாக வேலை செய்­தார்.

சாமி­வே­லு­வின் கடின உழைப்பு மலா­யன் கொலி­ரி­யர்ஸ் நிர்­வா­கத்­தைப் பெரி­தும் கவர்ந்­தது. அத­னால் அவ­ருக்கு எழுத்­தர் வேலை வழங்­கப்­பட்­டது. அந்த வேலை­யில் அவர் சிறிது காலம் பணி­பு­ரிந்­தார்.

1951ஆம் ஆண்டில் பத்து ஆராங் நகரைவிட்டு கோலா­லம்­பூ­ருக்கு வந்து சேர்ந்த சாமி­வேலு, கோலா­லம்­பூ­ரில் செந்­தூல் பகு­தி­யில் உள்ள ஓர் உண­வுக் கடை­யில் சமை­யல்­கா­ர­ருக்கு உத­வி­யா­ள­ரா­கப் பணியாற்றிய பிறகு ஸ்ரீ ஜெயா நிறு­வ­னத்­தில் சேர்ந்து பேருந்து உத­வி­யா­ள­ராக வேலை செய்­தார்.

அங்கு வேலை செய்­கின்ற காலத்­தில் அவ­ருக்கு வேத­வ­னம் கட்­ட­டக் கலை­ஞர் நிறு­வ­னத்­தில் அலு­வ­லக உத­வி­யா­ள­ரா­கப் பணி புரி­யும் புதிய வேலை­யும் கிடைத்­தது. இந்த வேலை தான் சாமி­வேலு­வின் வாழ்க்­கை­யையே மாற்றி அமைத்­தது.

அவரிடம் கட்­டட வரை­ப­டத் துறை­யில் பயிற்­சி­யா­ள­ரா­க­வும் சேர்ந்து தன்­னு­டைய கல்வி நிலையை வளர்த்­துக்கொண்­டார்.

திரு சாமி­வேலு, 1960ஆம் ஆண்டு மலே­சிய இந்­தி­யர் காங்­கி­ரஸ் கட்­சி­யில் (மஇக) சேர்ந்து 1974ஆம் ஆண்­டில் சுங்கை சிப்­புட் தொகு­தி­யின் இடைக்­கா­லத் தேர்­த­லில் போட்­டி­யிட்டு மலே­சிய நாடா­ளு­மன்­றத்­திற்­குத் தேர்வுசெய்­யப்­பட்­டார். 1979ஆம் ஆண்டு அக்­டோ­பர் 12ஆம் தேதியன்று திரு மாணிக்­க­வா­ச­கம் மறை­விற்­குப் பிறகு திரு சாமி­வேலு மஇ­கா­வின் தேசி­யத் தலை­வரா­கப் பொறுப்­பேற்றார்.

மலே­சி­யப் பொதுப் பணித் துறை அமைச்­சராகப் பல்லாண்டு பொறுப்பு வகித்த திரு சாமி­வேலு, 2008ஆம் ஆண்டு மலே­சிய பொதுத் தேர்­த­லில் தமது சுங்கை சிப்­புட் தொகு­தி­யைத் தக்­க­வைத்துக்­கொள்ள மீண்டும் களத்­தில் குதித்­தார்.

அப்­போது தமிழ் முர­சின் சார்­பில் மலே­சி­யப் பொதுத் தேர்­தல் செய்தி சேக­ரிப்­புப் பணிக்­காக நான் மலே­சி­யா­வுக்­குச் சென்­றி­ருந்­த­போது, சுங்கை சிப்­புட் தொகு­தி­யில் உள்ள நகர மண்­டபத்­தில் அவரை நேருக்கு நேர் சந்­திக்­கும் அரிய வாய்ப்பு எனக்­குக் கிடைத்தது.

சிங்­கப்­பூர் தமிழ் முரசு நாளி­தழி­லி­ருந்து நான் வந்­ததை அறிந்த திரு சாமி­வேலு, என்னை அழைத்து அவர் அருகே அமர வைத்து உப­சரித்­தார். மலே­சி­யா­வி­லும் சிங்­கப்­பூ­ரி­லும் தமிழ்­மொ­ழி­யின் வளர்ச்­சிக்­கும் தமி­ழர்­க­ளின் வளர்ச்­சிக்­கும் அரும்­பணி­யாற்­றிய தமி­ழ­வேள் கோ. சாரங்­க­பா­ணியை மிகுந்த மரி­யாதை யுடன் நினை­வு­கூர்ந்த அவர், அவ­ரது பங்­க­ளிப்­பு­தான் இந்த இரு நாடு­க­ளின் தமிழ்­மொழி வளர்ச்­சிக்கு முக்­கிய கார­ணம் என்று பெருமிதத்துடன் கூறினார்.

அந்த ஆண்டு தேர்­த­லில், தன்­னு­டைய சுங்கை சிப்­புட் நாடா­ளு­மன்­றத் தொகு­தி­யில் டாக்­டர் ஜெயக்­கு­மார் தேவ­ராஜ் எனும் பிகே­ஆர் கட்­சி­யின் வேட்­பா­ள­ரி­டம் தோல்வி அடைந்­தார். அந்­தப் பொதுத் தேர்­தல் முடிவு அவ­ரின் அர­சி­யல் வர­லாற்­றையே மாற்றி அமைத்­தது.

வீ. பழனிச்சாமி இணை ஆசிரியர்