ஐக்கிய நாட்டு நிறுவன அலுவலகம் மூடல்; மலேசியாவில் அகதிகள் கவலை

ஐக்கிய நாட்டு நிறுவன அலுவலகம் மூடல்; மலேசியாவில் அகதிகள் கவலை

1 mins read
a0cb5197-3c71-4844-960c-de181476f63c
-

கோலாம்­பூர்: மலே­சி­யா­வில் இயங்­கும் ஐக்­கிய நாட்டு நிறு­வ­னத்­தின் ஒரு பிரிவு மூடப்­ப­ட­லாம் என்று சென்ற வாரம் தெரி­விக்­கப்­பட்­டது. அப்பிரிவு அந்­நாட்­டில் பல ஆண்­டு­க­ளாக அகதிகளை நிர்­வ­கித்து வந்­துள்­ளது.

இதைத் தொடர்ந்து மலே­சி­யா­வில் வாழும் நூறா­யி­ரம் கணக்­கான அக­தி­கள் கவ­லைக்கு ஆளா­கி­யுள்­ள­னர்.

2020ஆம் ஆண்டு அக­தி­க­ளைப் பதி­வு­செய்ய 'ட்ரிஸ்' எனும் முறை உரு­வாக்­கப்­பட்­டது. அதைப் பயன்­படுத்த இவ்­வாண்டு ஜூலை மாதம் மலே­சிய அர­சாங்­கம் அனு­மதி வழங்­கி­யது. 'ட்ரிஸ்' முறைக்­குக்­கீழ் அக­தி­க­ளுக்கு உள்­ளூ­ரி­லேயே அடை­யாள அட்டை வழங்­கப்­பட்­டால் ஐக்­கிய நாட்டு நிறு­வ­னம் வழங்­கும் அடை­யாள அட்­டை­கள் தேவைப்­ப­டாது என்று மலே­சி­யா­வின் உள்­துறை அமைச்­சர் ஹம்ஸா கூறி­னார்.