கூகல் நிறுவனம் மீது விசாரணை நடத்தும் இந்தோனீசியா

கூகல் நிறுவனம் மீது விசாரணை நடத்தும் இந்தோனீசியா

1 mins read
2f6033ef-7bb3-4236-9993-ad8ad3431bfd
-

ஜகார்த்தா: உல­கின் மாபெ­ரும் தொழில்­நுட்ப நிறு­வ­ன­மான அல்­ஃப­பெட் நிறு­வ­னத்­தின் கூகல் இணை­யத்­த­ளத்­தின் மீது இந்­தோ­னீ­சியா விசா­ரணை நடத்­து­கிறது. 'கூகல் பிளே' தளத்­தில் செய­லி­களை வாங்க தனது கட்­டண முறை­யைப் பயன்­ப­டுத்­து­மாறு கூகல் வாடிக்­கை­யா­ளர்­க­ளைக் கட்­டா­யப்­ப­டுத்தி வரு­வது குறித்து விசா­ரணை மேற்­கொள்­ளப்­ப­டு­கிறது.

நியா­ய­மற்ற வர்த்­தக நட­வ­டிக்­கை­களை கூகல் மேற்­கொண்டு வரு­வ­தாக இந்­தோ­னீ­சியா கூறு­கிறது. அது தனது ஆதி­க்கத்­தைத் தவ­றா­கப் பயன்­ப­டுத்­து­வ­தா­கச் சந்­தே­கிக்­கப்­ப­டு­கி­ற­தென அதி­கா­ரி­கள் அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­த­னர். சுமார் 270 மில்­லி­யன் மக்­கள் உள்ள இந்­தோ­னீ­சி­யா­வில் 'கூகல் பிளே'தான் ஆகப் பெரிய செயலி விற்­ப­னைத் தளம்.

இந்த விவ­கா­ரத்­தின் தொடர்­பில் கூகல் பல நாடு­களில் சட்ட ரீதி­யான பிரச்­சி­னை­களை எதிர்­நோக்கி வருகிறது.