இலங்கை தமிழர்களின் அவல நிலை

இலங்கை தமிழர்களின் அவல நிலை

1 mins read
2af6d7d1-cbac-49ea-95b8-e8605b6d809b
இலங்கை உள்நாட்டுப் போரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் தனது இரு கால்களையும் இழந்த சிங்காரம் சூசயமுத்து நிலக்கடலை விவசாயம் செய்து வருகிறார். படம்: ராய்ட்டர்ஸ் -

முல்­லைத்­தீவு: தினக் கூலி ஊழி­ய­ரான திரு சிங்­கா­ரம் சூச­ய­முத்து தனது கைக­ளைக் கொண்டு நடந்து தனது பணி­களில் ஈடு­ப­டு­கி­றார், நிலக்­கடலை விவ­சா­யம் செய்­கி­றார். 2009ஆம் ஆண்டு இலங்கை உள்­நாட்­டுப் போரில் மேற்­கொள்ளப்­பட்ட ஆகா­யப் படைத் தாக்­கு­த­லில் இவர் தனது இரண்டு கால்­க­ளை­யும் இழந்தார்.

இடது கையி­லும் காயம் ஏற்­பட்ட 44 வயது சூச­ய­முத்து தற்­போது சரா­சரி தினக் கூலி ஊழி­ய­ரை­விட சிர­மங்­களை எதிர்­நோக்­கு­வ­தா­கக் கூறு­கி­றார்.

போரால் தமி­ழர்­கள் அதி­கம் வாழும் இலங்­கை­யின் வடக்­குக் கடற்­க­ரைப் பகு­தி­யில் உள்ள திரு சூச­ய­முத்­து­ வாழும் முல்­லைத்­தீவு சீர்­கு­லைந்­து­போ­னது. இப்­போது இலங்­கை­யில் நில­வி­வ­ரும் பொரு­ளி­யல் நெருக்­க­டி­யால் திரு சூச­ய­முத்­து­வைப் போன்ற தமி­ழர்­கள் மறுபடியும் அவ­திப்­படுகின்­ற­னர்.

பொரு­ளி­யல் நெருக்­க­டிக்கு முன்பு மீன­வ­ரா­கப் பணி­பு­ரிந்த திரு சூச­ய­முத்து, இலங்­கை­யின் எரி­சக்தி பற்­றாக்­கு­றை­யால் அதைக் கைவிட்டு நிலக்­க­டலை விவ­சா­யம் செய்­யத் தொடங்கினார்.

"நாங்­கள் பசி­யைத் தாங்­கிக்­கொள்­ள­லாம்; ஆனால் 'சாப்­பிட இவ்­வ­ளவு உண­வு­தான் இருக்­கிறது, படுத்து உறங்கு' என்று பிள்­ளை­களி­டம் எங்­க­ளால் சொல்­ல­மு­டி­யாது," என்று திரு சூச­ய­முத்து வருத்­தம் தெரி­வித்­தார்.

உணவுப் பண­வீக்க விகி­தம் சென்ற மாதம் 93.7 விழுக்­கா­டா­கப் பதி­வா­னது. பெரும் உண­வுப் பற்­றாக்­கு­றை­யால் திரு சூச­ய­முத்து­வைப் போல் இலங்கையில் 6.2 மில்­லி­யன் மக்­கள் இன்­ன­லுக்கு ஆளாகி­யி­ருப்­ப­தாக ஐக்­கிய நாட்டு நிறு­வ­னத்­தின் 'எஃப்ஏஓ' எனும் உணவு, விவ­சாய அமைப்பு கணித்துள்­ளது.