பேங்காக்: தாய்லாந்து தலைநகர் பேங்காக்கின் ராணுவ பயிற்சித் தளம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் தொடர்பில் ஒரு ராணுவ அதிகாரி மீது காவல்துறையினர் கொலைக் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.
சந்தேக நபரான சார்ஜென்ட் மேஜர் யோங்யுத் முங்கோர்ன்கிம் வரும் புதன்கிழமையன்று ராணுவ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார். இருவரைப் பலிவாங்கிய அச்சம்பவம் கடந்த புதன்கிழமையன்று நிகழ்ந்தது.

