லண்டனில் கத்திக் குத்து தாக்குதல்

1 mins read
01fd47c4-379e-402b-8e90-e945b5ac0b13
-

லண்­டன்: இங்­கி­லாந்­து தலை­ந­கர் லண்­ட­னின் மத்­தி­யப் பகு­தி­யில் இரண்டு காவல்­துறை அதி­கா­ரி­கள் கத்­திக் குத்­து தாக்­கு­தலுக்கு ஆளா­யி­னர். அச்­சம்­ப­வம் பிரிட்­டிஷ் நேரப்­படி நேற்று காலை ஆறு மணி­ய­ள­வில் நிகழ்ந்­தது.

தாக்­கப்­பட்ட காவல்­துறை அதி­கா­ரி­கள் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர். சந்­தேக நப­ரான ஓர் ஆட­வர் 'டேசர்' கரு­வி­யால் செய­லி­ழக்­கப்­பட்டு கைது செய்­யப்­பட்டார். சந்தேக நபரும் மருத்து­வ­மனை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டார்.

எலி­ச­பெத் அர­சி­யா­ரின் நல்­லு­டல் வைக்­கப்­பட்­டி­ருந்த இடத்­தி­லி­ருந்து ஒரு மைலுக்­கும் குறை­வான தொலை­வில் இருக்­கும் லெஸ்­டர் சதுக்­கத்­தில் தாக்­கு­தல் மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­கக் காவல்­துறை தெரி­வித்­தது.