மீட்கப்பட்ட பகுதிகளில் ர‌ஷ்யப் படைகள் அட்டூழியம்

மீட்கப்பட்ட பகுதிகளில் ர‌ஷ்யப் படைகள் அட்டூழியம்

2 mins read
f9fee89e-78e1-4761-8244-b3da945db0f9
-

கியவ்: ர‌ஷ்­யா­வி­டம் இருந்து சில பகு­தி­களை உக்­ரே­னி­யப் படை­கள் மீட்­டி­ருந்­தா­லும் போர் தங்­க­ளுக்­குச் சாத­க­மாகத் திரும்­பி­யுள்­ள­தா­கக் கரு­த­மு­டி­யாது என்று உக்­ரே­னிய அதி­பர் விளா­டி­மிர் ஸெலன்­ஸ்கி சொன்­னார்.

அப்­படி மீட்­கப்­பட்ட வட­கி­ழக்­குப் பகு­தி­களில், ர‌ஷ்ய வீரர்­கள் போர்க் குற்­றங்­கள் செய்­துள்­ள­தாகக் கூறிய அவர், புச்சா நக­ரத்­தில் பலரை ர‌ஷ்ய வீரர்­கள் கொன்று புதைத்­தி­ருந்­த­தைச் சுட்­டி­னார்.

"வட­கி­ழக்கு கார்­கிவ் பகு­தி­யில் கிட்­டத்­தட்ட 450 பேர் குவியலாகப் புதைக்­கப்­பட்­டுள்­ள­னர். மேலும், பலர் தனித்­தனி புதை­கு­ழி­களில் புதைக்­கப்­பட்­டுள்­ள­னர். பலர் துன்­பு­றுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

"ஒரு சில இடங்­களில் மக்­கள் குடும்­பங்­க­ளாக புதைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

"போர்க் குற்­றங்­கள் நடந்­­ததற்­கான சில ஆதா­ரங்­கள் உள்­ளன. உக்­ரேனிய, அனைத்­து­லக அதி காரிகள் அப்பகுதிகளை ஆராய்ந்து வரு­கின்­றனர்," என்று ஜெலன்ஸ்கி கூறி­னார்.

இஸி­யம் நகரப் புதை­குழி ஒன்­றில், கைகள் பின்­னால் கட்­டப்­பட்ட நிலை­யில் சட­லங்­கள் மீட்­கப்­பட்டு உள்­ள­தாக கார்­கிவ் ஆளு­நர் ஓலேஹ் சின்­ஹு­போவ் கூறி

­னார்.

உக்ரேனியப் படைகளின் தீவிர எதிர்த்தாக்குதல்களைப் பாராட்டிய ஸெலன்ஸ்கி, அதற்குள்ளாக போர் முடிவுக்கு வந்துவிட்டதாக நினைத்துவிடமுடியாது என்றும் சொன்னார்.

இதற்கிடையே, உக்­ரே­னின் எதிர்­தாக்­கு­தல்­க­ளால், ர‌ஷ்­யா­வின் ராணுவ நட­வ­டிக்­கை­யில் எந்த மாற்­ற­மும் இல்லை என்று ர‌ஷ்ய அதி­பர் புட்­டின் கூறி­யுள்­ளார். அத்­து­டன் உக்­ரேன் மீதான தாக்­கு­தல்­களை முடி­வுக்­குக் கொண்டு வர, ர‌ஷ்யா அவ­ச­ரம் காட்­ட­வில்லை என்­றும் அவர் சொன்­னார்.

உஸ்­பெக்­கிஸ்­தா­னில் நடை­பெற்ற உச்­ச­நிலை மாநாட்­டின்­போது செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய புட்­டின், "உக்ரேன் மீதான ராணுவ நடவடிக்கை திட்­டத்­தில் எந்த மாற்­ற­மும் இல்லை.

"டோன்­பாஸ் பகு­தி­யில் ர‌ஷ்யப் படை தொடர்ந்து தாக்­கு­த­லில் ஈடு­பட்டு வரு­கிறது. ஆனால், மெது­வான முன்­னேற்­ற­மாக உள்­ளது. ர‌ஷ்ய ராணு­வம் புதிய பகு­தி­க­ளைக் கைப்­பற்றி வரு­கிறது," என்­றார் அவர்.

ரஷ்ய ராணு­வத்­தின் ஒரு பகுதி மட்­டுமே உக்­ரே­னில் சண்­டை­யிடு­வ­தா­க­வும் டோன்­பாஸ் பகு­தியை முற்­றி­லும் கைப்­பற்­று­வதே தங்­க­ளது முக்­கிய இலக்கு என்­றும் அவர் சொன்­னார்.

உக்­ரே­னி­யப் படை­கள் தீவி­ர­வாத தாக்­கு­தல்­களை மேற்­கொள்­வதாக சாடிய புட்­டின் இதே நிலை நீடித்­தால், உக்­ரேன் கடு­மை­யான விளை­வு­க­ளைச் சந்­திக்க வேண்டி­

இ­ருக்­கும் என்­றும் அவர் சொன்­னார்.