ஆசிய நாடுகளை அச்சுறுத்தும் கனமழை, வெள்ளப்பெருக்கு

ஆசிய நாடுகளை அச்சுறுத்தும் கனமழை, வெள்ளப்பெருக்கு

2 mins read
3b215830-9fc6-4fe4-9a7d-f117568129dd
-

இஸ்­லா­மா­பாத்: பாகிஸ்­தா­னில் சில நாள்­க­ளுக்கு முன் பெய்த கன­மழை கார­ண­மாக மில்­லி­யன்­க­ணக்­கான மக்­கள் வீடு­களை இழந்து தவிக்­கும் நிலை­யில், அங்கு மேலும் வெள்­ளப் பெருக்கு ஏற்­படும் அபா­யம் உள்­ள­தாக எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

பாகிஸ்­தா­னின் பல பகு­தி­களில் வெள்­ளம் வடிந்­தி­ருந்­தா­லும், அண்டைநா­டான இந்­தி­யா­வின் சில பகு­தி­களில் பெய்து வரும் கன­மழை கார­ண­மாக ஆறு­க­ளின் நீர்­மட்­டம் உய­ரும் அபா­யம் உள்­ள­தாக பாகிஸ்­தான் அதி­கா­ரி­கள் கவலை தெரி­வித்­த­னர்.

பொருள் சேதங்­க­ளை­யும் உயிர் சேதங்­க­ளை­யும் தவிர்க்­கும் நோக்­கில், குறிப்­பிட்ட சில பகு­தி­களில் வசிப்­ப­வர்­களை அங்­கி­ருந்து வெளி­யே­றும்­படி மாநில பேரி­டர் மேலாண்மை ஆணை­யம் கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

ஏற்­கெ­னவே பொரு­ளா­தார சரி­வில் சிக்­கித் தவிக்­கும் பாகிஸ்­தான், வெள்­ளத்­தால் கிட்­டத்­தட்ட 30 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் இழப்­பைச் சந்­தித்­துள்­ளது.

நேப்­பா­ளத்­தில் 17 பேர் மர­ணம்

இதற்­கி­டையே, நேப்­பா­ளத்­தில் தொடர்ந்து பெய்து வரும் கன­மழை கார­ண­மாக ஏற்­பட்ட நிலச்­ச­ரி­வில் சிக்கிக் குறைந்­தது 17 பேர் உயிர்­ இ­ழந்­த­னர்.

மேற்கு நேப்­பா­ளத்­தில் உள்ள அச்­சாம் மாவட்­டத்­தில் ஏற்­பட்ட நிலச்­ச­ரி­வின்­போது ஐந்து வீடு­கள் சேற்­றில் புதைந்­தன. இதில் சிக்­கிய ஏழு பேர் காயத்­து­டன் மீட்­கப்­பட்­ட­னர். காய­ம­டைந்­த­வர்­கள் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

மீட்புப் பணிக்­காக ஹெலி­காப்­டர்­களை அனுப்ப உள்­துறை அமைச்சர் பால் கிரு‌ஷ்ண காந்த் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

ஆஸ்­தி­ரே­லியா, ஜப்­பா­னில் கன­மழை எச்­ச­ரிக்கை

இதற்­கி­டையே, ஆஸ்­தி­ரே­லி­யா­வின் நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்­தில் ஓரிரு நாள்­க­ளுக்­குப் பலத்த மழை­யும் கடு­மை­யான வெள்­ள­மும் ஏற்­படும் என அந்­நாட்­டின் வானிலை மையம் முன்­னு­ரைத்­துள்­ளது.

மேலும் நாட்­டின் பிற பகு­தி­களில் வரும் மாதங்­களில் வழக்­கத்­துக்கு மாறாக கன­மழை பெய்­யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜப்­பா­னின் தெற்குப் பகு­தி­யான கியூ‌‌ஷு தீவு பகுதியை மிக மோச­மான சூறா­வளி தாக்­கும் என்­றும் அது கடும் சேதங்­களை ஏற்­ப­டுத்­தும் என்­றும் எச்­ச­ரிக்­கப்­பட்­டு

உள்­ளது.

'நன்­ம­டோல்' என்ற அந்த சூறா­வ­ளி­யின் கார­ண­மாக மணிக்கு 270 கிலோ மீட்­டர் வேகத்­தில் காற்று வீசக்­கூ­டும் என்று எச்­ச­ரிக்­கப்­பட்­டது.

உள்­ளூர் நேரப்­படி இந்த சூறா­வளி சனிக்­கி­ழமையன்று கரையைக் கடக்­கக்­கூ­டும் என்று அறி­விக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில், முன்­ன­தாக அங்­கி­ருந்­த­வர்­கள் அனை­வ­ரும் பத்திரமாக வெளி­யேற்­றப்­பட்­ட­னர்.