இத்தாலி வெள்ளத்தில் 10 பேர் மரணம்

இத்தாலி வெள்ளத்தில் 10 பேர் மரணம்

1 mins read
70fc5ee4-5173-4a54-82bf-5705c8e7e804
-

மத்திய இத்தாலியில் பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் வெறும் நீராக இல்லாமல் சேறாக நகரங்களைச் சூழ்ந்தது. கிடுகிடுவென உயர்ந்த சேற்றில் சிக்கி 10 பேர் மாண்டுவிட்டனர். கண்ணெதிரே சிலரை விழுங்கிய அந்த வெள்ளத்தை, அப்பகுதி மக்கள் 'சுனாமி' என்று குறிப்பிட்டனர். மரங்களிலும் கூரைகளிலும் ஏறி தப்பியவர்களை மீட்புக் குழுவினர் காப்பாற்றினர். தங்களது பொருள்களில் படிந்துள்ள சேற்றைச் சுத்தம் செய்யும் குடியிருப்பாளர்களைப் படம் காட்டுகிறது. படம்: ஏஎஃப்பி