மஇகாவுக்குப் பச்சைக் கொடி, முழு ஆதரவு

மஇகாவுக்குப் பச்சைக் கொடி, முழு ஆதரவு

1 mins read
8d0f354f-eaaa-4b00-b3b2-d5edcce6efa7
-

கோலா­லம்­பூர்: தேசிய முன்­ன­ணி் கூட்­ட­ணி­யின் ஒரு பகு­தி­யான மலே­சிய இந்­தி­யர் காங்­கி­ரஸ் (மஇகா) ஆண்­டாண்டு கால­மா­கப் போட்­டி­யி­டும் நாடா­ளு­மன்ற, சட்­ட­மன்­றத் தொகு­தி­களில் இம்­மு­றை­யும் போட்­டி­யி­டும் என்று அம்னோ தலை­வர் அக­மது ஸாஹிட் ஹமிடி உறுதி அளித்­துள்­ளார். நேற்று முன்­தி­னம் அஸி­யாட்டா அரீனா விளை­யாட்­ட­ரங்­கத்­தில் நடை­பெற்ற மஇகா இளை­யர் அணிப் படை அறி­முக விழா­வில் திரு ஸாஹிட் கலந்­து­கொண்டு பேசி­னார்.

வழக்­கத்­தை­விட கூடு­தல் தொகு­தி­களில் போட்­டி­யிட மஇகா கோரிக்கை விடுக்­க­லாம் என்­றும் அது­கு­றித்து கலந்­து­ரை­யா­டிய பிறகே முடிவு எடுக்­கப்­படும் என்­றும் மஇகா தலை­வர் எஸ்.ஏ. விக்­னேஸ்­வ­ர­னி­டம் அவர் தெரி­வித்­தார்.

2018ஆம் ஆண்டு நடை­பெற்ற 14வது பொதுத் தேர்­த­லில் மஇகா ஒன்­பது நாடா­ளு­மன்­றத் தொகு­தி­ க­ளி­லும் 18 சட்­ட­மன்­றத் தொகு­தி­ க­ளி­லும் போட்­டி­யிட்­டது.

பேராக் மாநி­லத்­தில் தாப்பா நாடா­ளு­மன்­றத் தொகுதி மஇகா துணைத் தலை­வர் எம். சர­வ­ணன் வசம் சென்­றது. கேம­ரன் மலை நாடா­ளு­மன்­றத் தொகு­தியை அக்­கட்­சி­யின் சி. சிவ­ராஜ் கைப்­பற்­றி­னார்.

ஆனால் கேம­ரன் மலைத் தொகு­திக்­கான தேர்­தல் முடி­வு­கள் செல்­லாது என்று தேர்­தல் ஆணை­யம் அறி­வித்­ததை அடுத்து, அத்­தொகு­ தி­யில் இடைத்­தேர்­தல் நடத்­தப்­

பட்­டது. அதில் அம்­னோ­வைச் சேர்ந்த திரு முகம்­மது ராம்லி நூர் வெற்றி பெற்­றார்.

எதிர்­வ­ரும் தேர்­த­லில் மஇகா கூடு­தல் தொகு­தி­க­ளைக் கைப்­பற்­றும் எனத் திரு ஸாஹிட் நம்­பிக்கை தெரி­வித்­தார். திரு விக்­னேஸ்­வ­ர­னும் தேர்­த­லில் போட்­டி­யிட வேண்­டும் என்று அவர் சூச­க­மா­கத் தெரி­வித்­தார்.