ஜப்பானை சூறையாடிய அசுர புயல்; இருவர் பலி

ஜப்பானை சூறையாடிய அசுர புயல்; இருவர் பலி

1 mins read
2348f8d5-1092-4706-94c8-b9e47065cc7a
-

தோக்­கியோ: ஜப்­பா­னின் தென்­

கி­ழக்­குப் பகு­தியை உலுக்­கிய நன்­ம­டோல் புய­லால் உயிர்ச் சேத­மும் பொருள் சேத­மும் ஏற்­பட்­டுள்­ளன.

குறைந்­தது இரு­வர் மாண்­டு­விட்­ட­தாக ஜப்­பா­னிய அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

அவர்­களில் ஒரு­வர் வெள்­ள­நீர் புகுந்த கார் ஒன்­றுக்­குள் மாண்டு கிடந்­தார்.

ஏறத்­தாழ 70 பேர் காய­ம­டைந்­த­தாக ஜப்­பா­னின் தேசிய தொலைக்­காட்சி ஒளி­வழி என்­எச்கே தெரி

­வித்­தது.

பலத்த காற்று, கன­மழை கார­ண­மாக வெள்­ளம் கரை­பு­ரண்­டோ­டி­யது.

இத­னால் பலர் தங்­கள் வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யேற வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

ஜப்­பா­னின் தெற்கு, கிழக்­குப் பகுதி ­க­ளி­லி­ருந்து ஏறத்­தாழ 10 மில்­லி­யன் குடி­யி­ருப்­பா­ளர்­களை வெளி­யேற்ற மீட்­புப் பணி­யா­ளர்­க­ளுக்கு உத்­த­ர­

வி­டப்­பட்­டுள்­ளது.

நன்­ம­டோல் புயல் மணிக்கு 234 கிலோ­மீட்­டர் வேகத்­தில் வீசி­ய­தாக ஜப்­பா­னிய வானிலை மையம் தெரி­வித்­தது.

புயல் கார­ண­மாக வெள்­ளம்

மட்­டு­மின்றி நிலச்­ச­ரி­வு­களும் ஏற்­பட்­ட­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

இத­னால் பல கட்­ட­டங்­கள் சேத­

ம­டைந்­த­தா­க­வும் மின்­சா­ரக் கம்­பி­

வ­டங்­கள் துண்­டிக்­கப்­பட்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

இதன் விளை­வாக நேற்று நண்­ப­க­லி­லி­ருந்து குயூஷு தீவில் உள்ள கிட்­டத்­தட்ட 340,000 வீடு­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. அவ்­வீ­டு­களில் வசிப்­

ப­வர்­கள் மின்­சா­ரம் இன்றி தவிப்­ப­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

தீவில் வெள்­ளம் பெருக்­கெ­டுத்து ஓடி­ய­தில் சாலை­களும் வயல்­களும் நீரில் மூழ்­கின.

துயர்துடைப்பு முகாம்களில் குறைந்தது 20,000 பேர் அடைக்கலம் நாடியதாக ஜப்பானிய அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.