இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள பயங்கரவாத குற்றச்சாட்டுகளை மீட்டுக்கொள்ளும்படி அந்நாட்டின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமக்கு நெருக்கமான ஒருவருக்கு பிணை மறுக்கப்பட்டதை அடுத்து, பாகிஸ்தானின் காவல்துறையினருக்கும் நீதித்துறை அதிகாரிகளுக்கும் எதிராக இம்ரான் கான் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகள் பதிவாகின.
பயங்கரவாத குற்றச்சாட்டுகள் நீக்கப்பட்டு இதுதொடர்பான வழக்கு விசாரணை சாதாரண நீதிமன்றத்தில் நடத்தப்படும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.

