ஸூரிக்: ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் பெயரைச் சொல்லி இரண்டு பேரைக் கத்தியால் தாக்கிய சுவிட்சர்லாந்துப் பெண்ணுக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒன்பது ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
ஆனால் அவருக்கு மனநல சிகிச்சை வழங்க விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
தண்டனை விதிக்கப்பட்ட 29 வயது பெண்ணின் பெயரை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மனித உயிர் மீது அவருக்கு மரியாதை இல்லை என்று நீதிபதி சாடினார்.
2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதியன்று தென்சுவிட்சர்லாந்தில் நிகழ்ந்த தாக்குதலில் உயிரிழப்பு ஏற்படவில்லை.
கடை ஒன்றில் பொருள்கள் வாங்கிக்கொண்டிருந்த இரு பெண்கள் மீது அந்தப் பெண் திடீரென்று பாய்ந்து கத்தியால் அவர்களது கழுத்தை அறுக்க முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவ்விரு பெண்களும் காயம் அடைந்தனர்.

