இரு நாள்களில் எட்டு முறை வெடித்த எரிமலை

இரு நாள்களில் எட்டு முறை வெடித்த எரிமலை

1 mins read
6b181fb8-f795-46e5-8e61-66d13a554b87
டோங்கா தீவுக்கு அருகில் உள்ள எரிமலையிலிருந்து வெளியேறும் புகை, சாம்பல், எரிமலைக் குழம்பு.படம்: ஏஎஃப்பி -

நுக்குவாலோஃபா: டோங்­கா­வின் பிர­தான தீவுக்கு வடக்­குப் பகு­தி­யில் உள்ள எரி­மலை ஒன்று கடந்த இரண்டு நாள்­களில் எட்டு முறை வெடித்­தி­ருப்­ப­தாக அந்­நாட்­டின் புவி­யி­யல் சேவை தெரி­வித்­துள்­ளது.

எரி­மலை அரு­கில் உள்ள கடற்­ப­கு­தி­க­ளைத் தவிர்க்­கும்­படி கப்­பல்­களை அது எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

அதே­போல அதன் அரு­கில் உள்ள வான்­வெ­ளி­யில் பறக்க வேண்­டாம் என்று விமா­னி­க­ளி­டம் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

கடந்த பத்து நாள்­க­ளாக அந்த எரி­மலை, வானம் நோக்கி மூன்று கிலோ­மீட்­டர் உய­ரத்­துக்கு எரி­

ம­லைக் குழம்பு, புகை, சாம்­பல் ஆகி­ய­வற்­றைக் கக்­கு­வ­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

இந்­நி­லை­யில், எரி­மலை தொடர்­பான எச்­ச­ரிக்கை நிலையை மஞ்­சள் நிறத்­தி­லி­ருந்து ஆரஞ்சு நிறத்­துக்கு அதி­கா­ரி­கள் மாற்­றி­உள்­ள­னர். நிலைமை மோச­ம் அடைந்­தால் எச்­ச­ரிக்கை நிலை சிவப்பு நிறத்­துக்கு மாற்­றப்­பட்டு அவ­ச­ர­நிலை அறி­விக்­கப்­ப­டக்­

கூ­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.