ரஷ்யப் படைகளிடமிருந்து தப்பிய இலங்கை நாட்டினர்

ரஷ்யப் படைகளிடமிருந்து தப்பிய இலங்கை நாட்டினர்

1 mins read
90d5b99d-7f6c-4018-8054-d512fdcd7234
-

கியவ்: உக்­ரே­னின் இஸ்­யும் நகரை அந்­நாட்­டுப் படை­கள் ரஷ்­யா­வி­ட­

மி­ருந்து மீட்­டுக்­கொண்­டதை அடுத்து, இலங்கை நாட்­டி­னர் ஏழு பேர் மீண்­டும் சுதந்­திர காற்றை சுவா­சிக்­கத் தொடங்­கி­யுள்­ள­னர்.

கல்வி, வேலை நிமித்­தம் உக்­ரே­னில் வசித்­து­வந்த அந்த ஏழு பேரை­யும் கடந்த மே மாதம் ரஷ்­யப் படை­கள் சிறை­பி­டித்­த­னர்.

அவர்­களை ரஷ்­யப் படை­யி­னர் கடந்த நான்கு மாதங்­க­ளாக உக்­ரேன்-ரஷ்யா எல்­லைப் பகு­தி­யில் உள்ள இயந்­திர ஆலை ஒன்­றில் கொத்­த­டி­மை­க­ளாக வைத்­தி­ருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது. அது­மட்­டு­மல்­லாது, ரஷ்யப் படை­யி­னர் தங்­க­ளைச் சித்­திர­வதை செய்­த­தா­க­வும் அந்த இலங்கை நாட்­டி­னர் தெரி­வித்­த­னர்.

இந்­நி­லை­யில், போரின் துவக்­கத்­தில் ரஷ்­யா­வி­டம் இழந்த பகுதி­ களை அண்மைய நாள்­களில் உக்­ரேன் படை­யி­னர் மீட்டு வரு­கின்­ற­னர்.

அந்த ஏழு பேரும் அடைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த ஆலை இருந்த பகுதி உக்­ரே­னியப் படை­யி­ன­ரின் கட்­டுக்­குள் வந்ததும் அங்­கி­ருந்து ரஷ்­யப் படை­யி­னர் பின்­வாங்­கி­னர்.

இதை­ய­டுத்து, அந்த ஏழு பேருக்­கும் விடி­வு­கா­லம் பிறந்­தது.

அவர்­களை உக்­ரே­னிய காவல்­து­றை­யி­னர் கார்­கிவ் நக­ருக்கு அழைத்­துச் சென்று மருத்­துவ சிகிச்சை, புத்­தா­டை­கள் ஆகி­ய­வற்றை வழங்­கி­னர்.

ஏழு பேரும் தற்­போது நீச்­சல் குளம், உடற்­ப­யிற்­சிக் கூடம் ஆகி­ய­வற்­றைக் கொண்ட மறு­வாழ்வு மையம் ஒன்­றில் தங்­க­வைக்­கப்­

பட்­டுள்­ள­னர்.