'அறநெறி காவல்துறை'; வலுக்கும் எதிர்ப்பு, அதிருப்தி

'அறநெறி காவல்துறை'; வலுக்கும் எதிர்ப்பு, அதிருப்தி

1 mins read
4c80e4a2-31e6-48e8-bc6d-91c947e017ae
-

தெஹ்ரான்: ஈரா­னில் பெண்­க­ளுக்­கான மிகக் கடு­மை­யான ஆடை விதி­மு­றை­யைக் கண்­கா­ணிக்­கும் காவல்­து­றைப் பிரி­வால் தடுத்து வைக்­கப்­பட்ட 22 வயது பெண் மாண்­டதை அடுத்து, அந்­நாட்டு மக்­கள் கொதித்­தெ­ழுந்­துள்­ள­னர்.

மருத்­து­வ­ம­னை­யின் மூன்று நாள்­க­ளுக்கு கோமா­வில் இருந்த அப்­பெண் மர­ணம் அடைந்­தார். இதை­ய­டுத்து, அற­நெ­றியை நிலை­நாட்­டு­வ­தா­கக் கூறி செயல்­படும் அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக குரல்­கள் எழுந்­துள்­ளன. கடும் விமர்­ச­னங்­களை முன்­வைப்­ப­வர்­களில் ஈரா­னின் நாடாளு­மன்ற உறுப்­பி­னர் திரு ஜலால் ரஷிடி கூச்­சி­யும் ஒரு­வர். ஈரா­னிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஒரு­வர் இது­கு­றித்து எதிர்ப்பு தெரி­விப்­பது அரிது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

"'அறநெறி காவல்­துறை' அணுகு­முறை தவ­றா­னது. அத­னால் எவ்­வி­தப் பல­னும் இல்லை. மாறாக, நாட்­டுக்கு இழப்­பும் சேத­மும் ஏற்­பட்­டுள்­ளது.

"இந்த உண்­மை­யைச் சிலர் ஏற்க மறுப்­பதே பெரும் பிரச்­

சி­னை­யாக உள்­ளது," என்று திரு கூச்சி கூறி­னார்.

மாண்ட பெண் குர்­திஸ்­தான் மாநி­லத்­தைச் சேர்ந்­த­வர். கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை அம்­மா­நி­லத்­தில் கிட்­டத்­தட்ட 500 பேர் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். அவர்­

க­ளைக் கலைக்க காவல்­து­றை­யி­னர் கண்­ணீர்ப் புகை பாய்ச்­சி­னர். ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் சிலர் கைது செய்­யப்பட்­ட­னர்.

நேற்று முன்­தி­னம், ஈரான் தலை­ந­கர் தெஹ்­ரா­னில் ஆர்ப்­பாட்­டங்­கள் நடத்­தப்­பட்­டன.