பெட்டாலிங் ஜெயா: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கவும் அவருக்குக் கூடுதல் சிகிச்சை அளிக்கவும் அவர் செராஸ் மறுவாழ்வு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக சிறைச்சாலைத் துறை தெரிவித்துள்ளது.
தமக்கு உடல்நலம் சரியில்லை என்று நஜிப் கூறியதைத் தொடர்ந்து, மருத்துவப் பரிசோதனைக்காக அவர் கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக சிறைச்சாலைத் துறை கூறியது.
அதன் பின்னர், கடந்த திங்கள்கிழமை அவர் செராஸ் மறுவாழ்வு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
"நஜிப்புக்கு சிகிச்சை அளித்து முடித்து அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறலாம் என்று மருத்துவர்கள் அறிவித்தவுடன் அவர் காஜாங் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவார்," என்று சிறைச்சாலைத் துறை நேற்று தெரிவித்தது.