தைவான் இவ்வாண்டு அக்டோபர் மாத நடுப்பகுதியிலிருந்து வருகை தரும் பயணிகளுக்கான கட்டாய கொவிட்-19 தனிமை உத்தரவை விலக்கத் திட்டமிட்டுள்ளது.
அக்டோபர் மாதம் 13ஆம் தேதி வாக்கில் கட்டாய தனிமை உத்தரவு உட்பட இதர கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று தைவான் அரசாங்கம் வியாழக்கிழமையன்று (22 செப்டம்பர்) தெரிவித்தது.
ஆசியாவில் பல நாடுகள் கட்டுப்பாடுகளைப் பெரிய அளவில் தளர்த்தி அல்லது முற்றிலும் விலக்கியபோதும் தைவான் சில கட்டு்பிபாடுகளைத் தொடர்ந்து செயல்படுத்திவந்தது.

