பெட்டாலிங் ஜெயா: அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து தப்பி ஓடிய 'ஃபேட் லெனர்ட்' என்று அழைக்கப்படும் லெனர்ட் கிளென் ஃபிரான்சிஸ் வெனிசுவேலாவில் பிடிபட்டுள்ளார்.
அமெரிக்கக் கடற்படை அதிகாரிகளுக்கு 35 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமானமுள்ள லஞ்சம் கொடுத்து ஒப்பந்தங்களைப் பெற்றதாக மலேசியரான 58 வயது ஃபிரான்சிஸ் மீது குற்றம் சுமத்தப்பட்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் டியேகோ நகரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருந்த நிலையில், இம்மாதம் 4ஆம் தேதியன்று அவர் கம்பி நீட்டினார்.
அவரது நடமாட்டத்தைக் கண்காணிக்க அவரது கணுக்காலில் பொருத்தப்பட்டிருந்த சாதனத்தை ஃபிரான்சிஸ் வெட்டி எறிந்த
தாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வேறொரு நாட்டுக்குச் செல்ல இருந்த விமானத்தில் அவர் ஏற முயன்றபோது வெனிசுவேலா அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.
ஃபிரான்சிஸ் குறித்த தகவலை அனைத்துலகக் காவல்துறையும் அமெரிக்க மார்ஷல் பிரிவும் தகவல் அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஃபிரான்சிஸ் தமது மகனுடன் வெனிசுவேலாவில் இருப்பதாக செய்தியாளர்கள் டோம் ரைட்டும் பிராட்லி ஹோப்பும் அண்மையில் தெரிவித்திருந்தனர்.
வீட்டுக்காவலிலிருந்து ஃபிரான்சிஸ் தப்பி ஓடியதை அடுத்து, அவர் வெனிசுவேலாவில் இருப்பதாகத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக இருவரும் தெரிவித்தனர்.
அதையடுத்து, ஃபிரான்சிசுக்கு எதிரான பிடி இறுகியது.
ஃபிரான்சிசின் இருப்பிடம் குறித்து தகவல் அளித்து அவரது கைதுக்குக் காரணமாக இருப்ப
வருக்கு 40,000 அமெரிக்க டாலர் ($56,000) வெகுமதி வழங்கப்படும் என்று அமெரிக்க மார்ஷல் பிரிவு அறிவித்திருந்தது.
மலேசியாவில் இருக்கும்
அமெரிக்கத் தூதரகத்தில் நடைபெற்ற அமெரிக்கச் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள ஃபிரான்சிசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து, அவருக்கும் அமெரிக்கக் கடற்படை அதிகாரிகள் சிலருக்கும் அறிமுகம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.