மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவை நேற்று அதிகாலை ரிக்டர் அளவில் 6.8 நிலநடுக்கம் உலுக்கியது.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று மெக்சிகோவில் ஏற்பட்ட சக்தி
வாய்ந்த நில அதிர்வின் காரணமாக இரண்டு பேர் மாண்டனர், நூற்றுக்கணக்கான கட்டடங்கள் சேதமடைந்தன.
இந்நிலையில், நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது. அதைக் கேட்டு தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்த மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினர்.
நிலநடுக்கம் காரணமாக மரணம், சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்று மெக்சிகோ சிட்டி மேயர் கிலோடியா ஷைன்பாவ்ம் தெரிவித்தார்.