இலங்கையில் பணவீக்கம் 70.2 விழுக்காட்டை எட்டியது

இலங்கையில் பணவீக்கம் 70.2 விழுக்காட்டை எட்டியது

1 mins read
b32bf48c-cbbe-4a8d-8dce-13f0eb3e8e47
-

கொழும்பு: இலங்­கை­யின் வரு­டாந்­திர பண­வீக்க விகி­தம் கடந்த மாதம் 70.2 விழுக்­காட்டை

எட்­டி­யது.

ஓராண்­டுக்கு முன்பு இருந்த நிலை­யு­டன் ஒப்­பி­டு­கை­யில், அந்­நாட்­டில் உண­வுப் பொருள்­க­ளின் விலை 84.6 விழுக்­காடு ஏற்­றம் கண்­டுள்­ள­தாக அதி­கா­ர­பூர்­வத் தர­வு­கள் காட்­டு­கின்­றன.

22 மில்­லி­யன் மக்­கள்­தொ­கை­யைக் கொண்ட இலங்கை இவ்­வாண்டு மிகக் கடு­மை­யான பொரு­ளி­யல் நெருக்­க­டி­நி­லையை எதிர்­கொண்டு வருகிறது.

உணவு, மருந்து, எரி­பொ­ருள் போன்ற அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­களில் தட்­டுப்­பாடு ஏற்­பட,

அர­சி­யல் நெருக்­க­டி­நி­லை­யும் ஏற்­பட்­டது. நாட்­டின் அவ­ல­நி­லைக்கு இதற்கு முன்பு ஆட்­சி பீடத்­தில் இருந்த ராஜ­பக்சே குடும்­பத்­தின் முறை­யற்ற, தர­மற்ற நிர்­வா­கமே கார­ணம் என்று இலங்கை

மக்­கள் கொதித்­தெ­ழுந்­த­னர்.

இத­னால் அப்­போது இலங்­கை­யில் அதி­ப­ராக இருந்த கோத்­த­பாய ராஜ­பக்சே நாட்­டை­விட்டு தப்பி ஓடி­னார்.

ரணில் விக்­ர­ம­சிங்க அதி­பர் பத­வியை ஏற்­ற­தும் அவர் மீண்­டும் இலங்கை திரும்­பி­னார்.