இஸ்லாமாபாத்: வழக்கைத் தவிர்க்க நீதிபதியிடம் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மன்னிப்பு கேட்டுள்ளார். தமக்கு நெருக்கமான ஒருவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதை அடுத்து, அந்த நீதி
பதியை இம்ரான் கான் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இம்ரான் கானுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டிருந்தால் பாகிஸ்தானின் அடுத்த தேர்தலில் அவரால் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டிருக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.