ஹாங்காங்: ஹாங்காங்கிற்குள் நுழையும் பயணிகளை ஹோட்டலில் தனிமைப்படுத்தும் அணுகுமுறை விரைவில் முடிவுக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க தனிமைப்படுத்துதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
பொருளியல் பாதிக்கப்
பட்டுள்ளதாலும் உலகளாவிய நிதி மையம் என்ற நிலையை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகவும் தனிமைப்படுத்தும் அணுகு
முறையை நிறுத்த ஹாங்காங் கூடிய விரைவில் முடிவெடுக்கக் கூடும் என்று ஹாங்காங் நாடாளு மன்ற உறுப்பினர் திரு மைக்கல் தியேன் கூறினார்.
இதற்கிடையே, மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்பும் நோக்கில் நாட்டிற்குள் வருவோரைத் தனிமைப்படுத்தும் முறையை அடுத்த மாதம் நடுப்பகுதியில் முடிவுக்குக் கொண்டுவர தைவான் திட்டமிட்டுள்ளது.
ஓமிக்ரான் கொவிட்-19 கிருமி வகை காரணமாக இவ்வாண்டு தொடங்கியதிலிருந்து தைவானில் கிட்டத்தட்ட ஆறு மில்லியன் பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் பலருக்கு இலேசான பாதிப்பு மட்டுமே ஏற்பட்டது.

