தனிமைப்படுத்துதல்: தைவான், ஹாங்காங் நிறுத்தக்கூடும்

தனிமைப்படுத்துதல்: தைவான், ஹாங்காங் நிறுத்தக்கூடும்

1 mins read
3bac227e-6784-4248-8973-10abfeb59ae5
-

ஹாங்­காங்: ஹாங்­காங்­கிற்­குள் நுழை­யும் பய­ணி­களை ஹோட்­ட­லில் தனி­மைப்­ப­டுத்­தும் அணு­கு­முறை விரை­வில் முடி­வுக்கு வரக்­கூ­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க தனி­மைப்­ப­டுத்­து­தல் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது.

பொரு­ளி­யல் பாதிக்­கப்­

பட்­டுள்­ள­தா­லும் உல­க­ளா­விய நிதி மையம் என்ற நிலையை நிலை­நாட்ட வேண்­டும் என்­ப­தற்­கா­க­வும் தனி­மைப்­ப­டுத்­தும் அணு­கு­

மு­றையை நிறுத்த ஹாங்­காங் கூடிய விரை­வில் முடிவெடுக்கக் கூடும் என்று ஹாங்­காங் நாடாளு ­மன்ற உறுப்­பி­னர் திரு மைக்­கல் தியேன் கூறி­னார்.

இதற்­கி­டையே, மீண்­டும் வழக்­க­நி­லைக்­குத் திரும்­பும் நோக்­கில் நாட்­டிற்­குள் வரு­வோ­ரைத் தனி­மைப்­ப­டுத்­தும் முறையை அடுத்த மாதம் நடுப்­ப­கு­தி­யில் முடி­வுக்­குக் கொண்­டு­வர தைவான் திட்­ட­மிட்­டுள்­ளது.

ஓமிக்­ரான் கொவிட்-19 கிருமி வகை கார­ண­மாக இவ்­வாண்டு தொடங்­கி­ய­தி­லி­ருந்து தைவா­னில் கிட்­டத்­தட்ட ஆறு மில்­லி­யன் பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது. அவர்­களில் பலருக்கு இலே­சான பாதிப்பு மட்­டுமே ஏற்­பட்­டது.