கைரி: தேர்தல் நடத்த பருவமழைக்காலம் உகந்ததல்ல

கைரி: தேர்தல் நடத்த பருவமழைக்காலம் உகந்ததல்ல

1 mins read
b11dd150-e6f5-4e62-a5c5-d0649c91207b
-

புத்­ரா­ஜெயா: பொதுத் தேர்­தலை நடத்த பரு­வ­ம­ழைக்­கா­லம் உகந்­த­தல்ல என்று மலே­சிய சுகா­தார அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன் தெரி­வித்­துள்­ளார்.

பரு­வ­ம­ழைக்­கா­லத்­தில் தேர்­தலை நடத்­தி­னால் அது தள­

வா­டப் பிரச்­சி­னையை மட்­டு­மின்றி சுகா­தா­ரப் பிரச்­சி­னை­க­ளை­யும் ஏற்­ப­டுத்­தும் என்று அவர்

தெரி­வித்­தார்.

பொது­வாக வெள்ள அபா­யம் உள்ள மாதங்­களில் தேர்­தலை அர­சாங்­கம் நடத்­து­வ­தில்லை என்று திரு கைரி கூறி­னார்.

"பரு­வ­ம­ழைக்­கா­லத்­தின்­போது மேற்­கொள்­ளப்­படும் நட­வ­டிக்­கை­

க­ளுக்கு அதிக மனி­த­வ­ளம் தேவைப்­படும்.

"பாதிக்­கப்­பட்­டுள்ள பகு­தி­

க­ளி­லி­ருந்து குடி­யி­ருப்­பா­ளர்­களை வெளி­யேற்­று­வது, துயர்­து­டைப்பு மையங்­களை நிர்­வ­கிப்­பது போன்ற பணி­களில் பலர் ஈடு­ப­டுத்­தப்­

ப­டு­வர்.

"அத­னால் வெள்­ளம் ஏற்­படும் காலத்­தில் தேர்­தலை நடத்­து­வது பல சிர­மங்­களை ஏற்­ப­டுத்­தும். மேலும், பள்­ளி­களும் வாக்­க­ளிப்பு மையங்­க­ளா­கப் பயன்­ப­டுத்­தப்­படும்," என்று மலே­சிய சுகா­தார அமைச்சு நேற்று நடத்­திய சிறப்பு செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில்

அமைச்­சர் கைரி கூறி­னார்.