இணையக் குற்றக் கும்பலிடமிருந்து 15 பேர் மீட்பு

இணையக் குற்றக் கும்பலிடமிருந்து 15 பேர் மீட்பு

1 mins read
f20f5379-a860-4051-98c9-93dcf3ccc486
-

கோலா­லம்­பூர்: கம்­போ­டி­யா­வில் உள்ள இணை­யக் குற்­றக் கும்­ப­லி­டம் சிக்­கிய 15 பேரை மலே­சிய அதி­கா­ரி­கள் காப்­பாற்­றி­யுள்­ள­னர்.

அந்த 15 பேரும் மலே­சி­யா­வுக்­குத் திரும்­பி­விட்­ட­தாக மலே­சிய வெளி­யு­றவு அமைச்சு தெரி­வித்­தது. தென்­கி­ழக்­கா­சிய நாடு­களில் இதே போன்ற கும்­பல்­க­ளி­டம் சிக்­கித் தவிக்­கும் மலே­சி­யர்­க­ளைக் காப்­பாற்றி சொந்த நாட்­டுக்­குத் திருப்­பிக் கொண்­டு­வ­ரும் நட

­வ­டிக்­கை­களை மலே­சிய அர­சாங்­கம் தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்­ளது.

கம்­போ­டியா, லாவோஸ், மியன்­மார், தாய்­லாந்து ஆகிய நாடு­களில் உள்ள வேலை மோச­டிக் கும்­பல்­க­ளி­டம் சிக்­கி­யி­ருக்­கும் மலே­சி­யர்­கள் தொடர்­பாக 301 புகார்­கள் கிடைத்­தி­ருப்­ப­தாக மலே­சிய வெளி­யு­றவு அமைச்சு கூறி­யது.