கோலாலம்பூர்: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று காஜாங் சிறைக்குத் திரும்பியுள்ளார் முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்.
ஊழல் புரிந்ததற்காக 12 ஆண்டு சிறைத் தண்டனையை அவர் அனுபவித்து வருகிறார்.
கடந்த திங்கட்கிழமையன்று அவர் கோலாலம்பூர் மருத்துவ
மனையிலிருந்து செராஸ் மறுவாழ்வு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
அங்கு அவருக்கு இயன் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட
தாகத் தெரிவிக்கப்பட்டது.
செராஸ் மறுவாழ்வு மருத்துவ
மனையில் நஜிப்புக்கு பல மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டதாகவும் மறுவாழ்வு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்பதை பரிசோதனை முடிவுகள் காட்டுகின்றன.