தோக்கியோ: ஹமாமாட்சு நகரில் சூறாவாளியால் சேதமடைந்த பாலம். ஜப்பானின் மத்தியப் பகுதியைத் தாக்கிய 'டலாஸ்' சூறாவளியில் குறைந்தது இருவர் மாண்டனர். மேலும், பல்லாயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அந்நாட்டின் கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்தது. குறிப்பாக தலைநகர் தோக்கியோவிற்கு அருகே உள்ள ஷிஸுவோக்கா நகரம் அதிகம் பாதிக்கப்பட்டது.
படம்: ராய்ட்டர்ஸ்

