கோலாலம்பூர்: மலேசியாவில் மழைக்காலத்தில் பொதுத் தேர்தல் நடத்துவதை எதிர்த்து தலைநகர் கோலாலம்பூரில் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வரும் நவம்பர் மாதம் பொதுத் தேர்தல் நடத்தப்படக்கூடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுவதைத் தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. மலாய் மொழியில் 'முதலில் உயிர்கள், அதற்குப் பிறகு பொதுத் தேர்தல்' என்ற குறிப்பைக் கொண்ட பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்களில் பலர் வைத்தருந்தனர்.
கோலாலம்பூரின் மத்தியப் பகுதியில் உள்ள 'சோகோ' கடைத்தொகுதிக்கு வெளியே சிலர் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். முக்கிய எதிர்தரப்புக் கூட்டணியான பக்கத்தான் ஹரப்பானில் சேர்ந்துகொள்ளும் எண்ணம்கொண்ட முடா எனும் சிறிய கட்சி ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.