ரோம்: இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இத்தாலியில் முதன்முறையாக வலதுசாரி கட்சியின் தலைமையில் அரசாங்கம் அமைக்கப்படும் சாத்தியம் உருவெடுத்துள்ளது.
வாக்களிப்பு நேற்று நடைபெற்றது. முன்னாள் இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியின் ஆதரவாளராக இருந்த ஜார்ஜியா மெலோனியின் 'பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி' கட்சி கருத்துக் கணிப்புகளில் முன்னணி வகித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

