ரஷ்யப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு சம்பவம்: 7 சிறுவர்கள் பலி

ரஷ்யப் பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 7 சிறுவர்கள் உட்பட 13 பேர் பலியாயினர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவன் தன்னைத்தானே சுட்டுகொன்றான்.

இந்த சம்பவத்தை மனிதாபிமானற்ற பயங்கரவாத தாக்குதல் என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டின் கூறினார்.

தாக்குதலை நடத்தியவனுடைய அடையாளம், அவனுடைய நோக்கம் ஆகிய தகவல்கள் தெளிவாக தெரியவில்லை எனக் கூறப்பட்டது.

துப்பாக்கிக்காரன் கருப்பு ஆடைகள் அணிந்திருந்ததாகவும், அவனுடைய தலையும் முகமும் மறைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டது. அவன் அணிந்திருந்த சட்டையில் ஸ்வஸ்திகா சின்னம் வரையப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. துப்பாக்கிக்காரனிடம் இரண்டு கைத்துப்பாக்கிகளும் பல தோட்டாகளும் இருந்ததாக காவல் துறையினர் குறிப்பிட்டனர்.

ரஷ்யாவில் அண்மைய ஆண்டுகளில் பல பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த ஆண்டு ஏப்ரலில் பாலர் பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு குழந்தைகளும் ஓர் ஆசிரியரும் கொல்லப்பட்டனர்.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!