அதிகமான பயணிகளை வரவேற்க ஹாங்காங் ஆயத்தம்

அதிகமான பயணிகளை வரவேற்க ஹாங்காங் ஆயத்தம்

1 mins read
a6f165c7-cf25-4986-95f0-a5d096206b0c
-

ஹாங்­காங்: பய­ணி­களை ஹோட்­ட­லில் தனி­மைப்­ப­டுத்­தும் உத்­த­ரவு ஹாங்­காங்­கில் நேற்று முதல் விலக்­கப்­பட்­டுள்­ளது. அதைத் தொடர்ந்து அதி­க­மான பய­ணி­களை வர­வேற்க அந்­ந­க­ரம் ஆயத்­த­மாகி வரு­கிறது.

இரண்டரை ஆண்டு­க­ளுக்­குப் பிறகு பய­ணக் கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­தப்­போ­வ­தாக ஹாங்­காங் சென்ற வாரம் அறி­வித்­தது.

அதைத் தொடர்ந்து பய­ணம் தொடர்­பி­லான கோரிக்­கை­கள் 10 மடங்­கா­ன­தாக பயண நிறு­வ­னங்­கள் தெரி­வித்­துள்­ளன.

இதற்­கி­டையே, கொள்­ளை­நோய்ப் பர­வ­லின் தற்­போ­தைய கட்­டத்­தில் எல்லா பய­ணக் கட்டுப்­பா­டு­க­ளை­யும் விலக்­க­மு­டி­யாது என்று ஹாங்­காங் சுகா­தார அமைச்­சர் லோ சுங்-மாவ் கூறி­யுள்­ளார். தற்­போது அப்படி செய்வது அபா­ய­க­ர­மா­னது என்று அவர் குறிப்­பிட்­டார்.