புதிதாக விளைந்த பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை விற்கும் உலகின் ஆகப் பெரிய சந்தைகளில் ஒன்று தீயால் அழிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசின் புறநகர்ப் பகுதியில் இருக்கும் 'ருங்கிஸ் காம்பிளக்ஸ்' நிலையத்தில் பழங்களும் காய்கறிகளும் உள்ள கிடங்கு தீயால் அழிக்கப்பட்டது. நேற்று முன்தினம் தீ வேகமாகப் பரவியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நூற்றுக்கணக்கான தீயணைப்பு அதிகாரிகள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
படம்: ஏஎஃப்பி