சிட்னி: தேசிய அளவில் ஊழல் எதிர்ப்புக் குழுவை அமைப்பதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்தப்போவதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் செவ்வாய்க்கிழமையன்று (27 செப்டம்பர்) தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் அரசியல்வாதிகளைக் கண்காணிக்க தனிப்பட்ட முறையில் இயங்கும் குழு ஒன்று அமைக்கப்படவேண்டும் என்று பல ஆண்டுகளாக குரல் எழுப்பப்பட்டு வந்துள்ளது.
அதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.
இந்நடவடிக்கை மீண்டும் அரசியல் நம்பகத்தன்மையைக் கொண்டுவரும் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனீஸ், அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி மார்க் டிரேஃபஸ் இருவரும் கூறினர்.