உக்ரேனின் நான்கு பகுதிகள் ரஷ்யாவுடன் இணைக்கப்படவுள்ளன

உக்ரேனின் நான்கு பகுதிகள் ரஷ்யாவுடன் இணைக்கப்படவுள்ளன

1 mins read
b6f5563d-c35a-4169-b581-eed73d4751f0
-

மாஸ்கோ: உக்­ரே­னில் உள்ள நான்கு பகு­தி­களை ரஷ்யா இன்று அதி­கா­ர­பூர்­வ­மா­கத் தன்­வ­சப்­ப­டுத்­தும் என்று கிரம்­ளின் தெரி­வித்­துள்­ளது. இதன் தொடர்­பில் அப்­ப­கு­தி­களில் இம்­மா­தம் வாக்­கெ­டுப்பு நடந்­த­தைத் தொடர்ந்து இந்த­நடவடிக்கை எடுக்­கப்­ப­டு­கிறது.

இதன் மூலம் கிழக்கு, தென் உக்­ரே­னில் உள்ள அதிக இடங்­கள் ரஷ்­யா­வு­டன் இணைக்­கப்­படும். அதற்­கான ஆவ­ணங்­களில் ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டின் கையெழுத்­தி­டு­வார் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதற்கான சடங்கு இன்று நடைபெறவுள்ளது.

இதற்­கி­டையே கூடு­தல் படை­களைத் திரட்ட ராணுவ அனு­ப­வம் உள்ள பொது­மக்­களை உக்­ரேன் போரில் ஈடு­ப­டுத்­தப்­போ­வ­தாக திரு புட்­டின் அறி­வித்­த­தைத் தொடர்ந்து குறைந்­தது 200,000 ரஷ்­யர்­கள் அந்­நாட்­டை­விட்டு வெளி­யே­றி­யுள்­ள­னர்.