தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆங் சான் சூச்சிக்கு மேலும் மூவாண்டு சிறை

1 mins read
51580532-a4a9-439c-9748-5f5a24c5ca4d
-

நேப்பிடாவ்: முன்னாள் மியன்மார் தலை­வர் ஆங் சான் சூச்­சிக்கு மேலும் மூவாண்டு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. அந்­நாட்­டின் உள்­நாட்­டுப் பாது­காப்பு சட்­டத்தை மீறி­ய­தற்­காக அவ­ருக்கு இந்­தத் தண்­டனை விதிக்­கப்­பட்டது.

திரு­வாட்டி சூச்சி ஏற்­கெ­னவே 20 ஆண்டு சிறைத் தண்­ட­னையை நிறை­வேற்றி வரு­கி­றார். தேர்­த­லில் ஏமாற்­றுச் செயல்­களில் ஈடு­பட்­டது, ஊழல், கொவிட்-19 கொள்­ளை­நோய்ப் பர­வல் கட்­டுப்­பா­டு­களை மீறி­யது உள்­ளிட்ட குற்­றச்­சாட்­டு­களின் தொடர்­பில் அவ­ருக்கு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டி­ருந்­தது. அவ­ரின் அர­சி­யல் வாழ்க்கையை முடி­வுக்­குக் கொண்டு­வர அவ்­வாறு செய்­யப்­பட்­ட­தா­கக் கரு­தப்­ப­டு­கிறது.

ஆஸ்­தி­ரே­லி­யர் ஷோன் டர்­னெல் எனும் பொரு­ளி­யல் நிபு­ண­ருக்­கும் உள்­நாட்­டுப் பாது­காப்பு சட்­டத்தை மீறி­ய­தற்­காக மூவாண்டு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. மியன்­மா­ரில் மக்­கள் ஆட்சி இருந்­த­போது அவர் அர­சாங்க பொரு­ளி­யல் ஆலோ­ச­க­ரா­கப் பணி­யாற்­றி­னார்.