பயணக் கட்டுப்பாடுகளை விலக்கும் தென்கொரியா

பயணக் கட்டுப்பாடுகளை விலக்கும் தென்கொரியா

1 mins read
a00d254a-fe3c-4326-b43c-cf831d458634
-

சோல்: இன்று முதல் தென்­கொரியா செல்­வோர் பய­ணம் மேற்­கொள்­வ­தற்கு முன்பு 'பிசி­ஆர்' பரி­சோ­த­னையை மேற்­கொள்­ளத் தேவை­யில்லை. அந்­நாட்­டின் யோன்­ஹாப் செய்தி நிறு­வ­னம் நேற்று இதைத் தெரி­வித்­தது.

முன்­ன­தாக தென்­கொ­ரி­யா­வுக்­குப் பய­ணம் மேற்­கொள்­வ­தற்கு முன்பு 24 மணி­நே­ரத்­திற்­குள் பயணி­கள் 'பிசி­ஆர்' பரி­சோ­தனை மேற்­கொள்­வது கட்­டா­ய­மாக இருந்தது. இப்­போது அந்­நாட்­டில் அனைத்து பய­ணக் கட்­டுப்­பா­டு­களும் விலக்­கப்­பட்­டுள்­ளன.

இதற்­கி­டையே, ஆஸ்­தி­ரே­லி­யா­வில் இம்­மா­தம் 14ஆம் தேதி முதல் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­னோர் ஐந்து நாள்­க­ளுக்­குத் தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­ளத் தேவை­யில்லை என்று அந்­நாட்­டுப் பிர­த­மர் ஆன்­டனி அல்­ப­னீஸ் தெரிவித்துள்ளார். எனி­னும், அச்­செ­யல் பொது­மக்­க­ளின் சுகா­தா­ரத்­திற்கு ஆபத்து விளை­விக்­கும் ஒன்­றாக அமை­ய­லாம் என்று ஆஸ்­தி­ரே­லிய மருத்­து­வர்­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

கடந்த சில மாதங்களாக பல உலக நாடுகள் பல கிரு­மிப் பர­வல் கட்டுப்­பா­டு­களைப் பெரிய அளவில் தளர்த்தி வரு­கின்­றன.